Showing posts with label கவிதை. Show all posts

என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே


உந்தன் உயிரிலும் மேலாக
என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும்
உம் அன்புக்கு ஈடாகுமா
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

இடி என இன்னல்கள் வந்தாலும்
வெண்பனி போல் மாற்றீனீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

எத்தனை பேர் என்னை ஏமாற்றினாலும்
நீர் என்னை ஆசீர்வதித்தீர்
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

எந்தன் உயிரை கொல்ல தேடியபோது
உந்தன் சிறகுகளில் மறைத்து காத்தீரே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

அந்நிய நாட்டில் அகதியாய் வாழ்ந்தேன் 
நீர் எனக்கு அடைக்கலமே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்

உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்

உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன்
என் உயிருக்கு உயிரான அன்பை நான் தேடுகிறேன் 
அன்பே அன்பே எங்குள்ளதோ 
அங்கே அங்கே நான் இருப்பன் 
ஒளியின் இதயத்தை தேடுகிறேன் 
அன்பு உள்ளத்தை தேடுகிறேன் 
எங்கும் எங்கும் உள்ளவரே 
அன்பை அன்பை கொடுப்பவரை 
தேடினேன் தேடியும் கண்டுகொண்டேன் 
என் அருமை ஜேசு ராஜாவை 
காலங்கள் மாறலாம் நேரங்கள் மாறலாம் 
குணங்கள் மாறலாம் வழிகள் மாறலாம் 
நன்றி http://aseervatha.blogspot.com/

சுடர்தனை கேட்டால்





















கடலினைக் கேட்டால் என்  காதலினைச் சொல்லும் 
உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும்
சுடர்தனை  கேட்டால் என் சுய விபரம் சொல்லும்
படர் நிலவைப்  பார்த்தால்  உன் முகம்  பெண்ணே 
கண்ணென்றிருந்தால்  உன்னையே காணும்
எங்கும்  நீ தான் என் செல்லக் கிளியே!!!

உள்ளமோ ஏங்குகிறது ,,,,,,,,,,

 வருடங்கள் கூடுகிறது 

மாதங்கள் ஓடுகிறது 

வயது   கூடுகிறது
 
அழகிய வடிவம் அழிகிறது 

உள்ளமோ ஏங்குகிறது 

குணங்கள் மாறுகிறது 

இயற்கை கூட சீற்றமடைகிறது  
  
என் அன்பே உன் புன்னகை மட்டும் 

இன்னும் மாறவில்லையே  !!!!!!!!! 
 

















உலகின் தெய்வம் நீயே


உலகம்  எல்லாம்  அன்னையே போற்றுகின்றது 
முதன்முதலில் பார்ப்பது  உன் முகமே !
மனிதனை உருவாகுவதும் நீயே
இரவும் பகலும் உறங்காமல்
பார்பவளும்  நீயே !
எதையும் எதிர்பார்க்காமல் பாசத்தை
பொழிபவள் நீயே
உலகின் தெய்வம்  நீயே

உயிர்த்தார் கிறிஸ்து உயிர்த்தார் !!!!!!!!!!!!!!!!!!!!!!

உயிர்த்தார் கிறிஸ்து  உயிர்த்தார் இந்த உலகை  ஜெயித்து விட்டார் 
மனுகுலத்தை  மீட்ட  இறைவன் கல்லறைவிட்டு  உயிர்த்துவிட்டார்  
அலகையின் பிடியில்  இருள்  சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால்     ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு  கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு  பலர் ஏளனம்  மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய்  உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில்  உரம்  பெற  உயிர்த்துவிட்டார்
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்

புதுவழிகள்


புத்தாண்டு புத்தொளிகள் 
புதுவழிகள் புதுவருடத்தில்
புன்னகைகள் புது உறவில்
புத்தம் புதிய ஆடை அணிந்து
ஒன்றாய் சேர்ந்து மகிழ்ந்திடுவோம்
இவ்வாண்டு முழுவதும் நன்மைகள்
கிடைக்க  வாழ்த்துகின்றேன்.

காட்டையே அழித்து


ஒரு மூங்கில் காட்டையே அழித்து
ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன்
ஊதும் போது தான் தெரிந்தது
அது உன்னைப் போலவே ஊமை என்று   அழித்து

மிகவும் பிரம்மிக்கவும் அழகிய சங்கீதம் !!!!!!!!!

எனது வலைப்பூவில் வருகைதரும் அனைவருக்கும் வணக்கம்,

நான் வலைப்பூவை ஆரம்பித்து எ ட்டு  மாதங்கள் ஆனாலும் இவ்வளவு வரவேற்பு பெறுமென நினைக்கவில்லை  .  கருத்துக்களையும், வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும்  எனது  வலைப்பூவிற்கு வருகைதரும்  அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இது எனது நூறாவது இடுகை இந்த மகிழ்ச்சியில்   மிகவும் பிரம்மிக்கவும்  அழகிய சங்கீதம் கணணி வந்த பின்னர் முடியாது எதுவும் இல்லை.
எனது நண்பர்கள்  எனது வலைப்பூவில் தொடர்ந்து  வருகை தருவீர்களென எதிர்பார்க்கின்றேன்.

காதலர் தினம்

 பல யுகங்கள்  சென்றாலும்
அழியாது   காதலர் தினம்
இரு மனங்கள் ஒன்று சேரும்
இன்றைய தினத்தில் இன்பங்கள்
 பொங்கட்டும் இதயங்களில்

பெண்ணினத்தை

பெண்ணினத்தை அவமதித்துப்
பெருமை பெற நினைத்தவர்கள்
பெரும்பாவச் சுமையேற்றுப்
பெற்ற துன்பம் உலகறியும்
எண்ணி எண்ணிப் பெண்
பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி
 இன்பமுற்ற்றார் இவ்வுலகில்
இறைவனைப்போல் என்றும்முள்ளார் 

இன்பத்தில்

முள்ளில்  பூக்கும் ரோஜா நீ
உன்னை அள்ளிப் பறித்தேன்
சொல்ல முடியா  அன்பில்.
என் அன்புக்கு வானம் இல்லை
உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் நிழலில் இன்பத்தில்
இணையும் எம் இதயம்

ஒன்றின் தோல்வி


ஒன்றின் தோல்வி மற்றொன்றின்  வெற்றி
 ஒன்றின் அழிவு  மற்றொன்றி ஆக்கம் !!!!!
ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம்!!!!
இந்த அழிவு இந்த ஆக்கம் என்பனவற்றிலிருந்தே
மனிதனுடைய எண்ணம் , அவனுடைய சக்தி செயல்
எல்லாம்  வளர்ச்சியடைந்து  வருகின்றன ..........
                                                     

புத்தொளிகள்

புத்தாண்டு புத்தொளிகள் 
புதுவழிகள் புதுவருடத்தில்
புன்னகைகள் புது உறவில்
புத்தம் புதிய ஆடை அணிந்து
ஒன்றாய் சேர்ந்து மகிழ்ந்திடுவோம்
இவ்வாண்டு முழுவதும் நன்மைகள்
கிடைக்க  வாழ்த்துகின்றேன்.

முட்கள்


முகஸ் துதி செய்பவர்கள்
 ரோஜாவுடன் உள்ள
 முட்கள் போன்றவர்கள்

குழந்தையாக!!!!!

 நான் படித்ததில் பிடித்த கவிதை

மனதில்

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும்
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்   
என்பதை  உணர்ந்திடல் வேண்டும்

 

மாவீரர்களின்

செநீராலும் கண்ணீராலும்

எழுதபடுகிறது ஈழ வரலாறு

செம் மொழிஜாம் எம்

தமிழ்மொழிஜானது எம்

மாவீரர்களின் வீர காவிஜமே

உயர்ந்திடு

சஞ்சலம் நிறைந்த வாழ்விலும்
சங்கடம் மலிந்த உலகிலும்
சருகாய் மடிந்து போகாமல்
நம்பிக்கையைப் பிடித்து
  உயர்ந்திடு வா!ழ்வில்

அறியாததால்

நண்பர் என்றார், உறவினர் என்றார்
நாடியை நசுக்குவாரென யார் கண்டது
கண்டதும் நட்புக் கொண்டதால்???????????
வந்த வினை!!!!!!!
விதியின் விளையாட்டல்ல
சரியாக அறியாததால் வந்த பிழைதானே !!!!!!!!!!!!